Download this file

தூதர் நூஹ் (நோவா) அவர்களின் வரலாறு.

இறைவன் ஒருவர் தவிர வேறில்லை.

தனித்தவர்,​​ ஞானமிக்கவர்.

 

இறைவனின் பெயரால்,​​ மிக்க அருளாளர்,​​ மிக்க கருணையாளர்.,

 

தூதர் நூஹ்(நோவா) பற்றி வரக்கூடிய குர்'ஆன் வசனங்களை பல இடங்களிலிருந்து எடுத்து அதனை ஒன்று​​ சேர்த்து அதன் மொழிபெயர்ப்பை இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம். படிப்பினை பெறுவோம்.

 

இறைவன்,​​ நம்மை அவருடைய கருணை மற்றும் நேர்வழியில் நுழைவிப்பாராக.,

 

அவ்துபில்லாஹிமின​​ சைத்தானிர்​​ ரஜீம்

பிஸ்மில்லாஹிர்​​ ரஹூமாநிர்​​ ரஹீம்

 

[42:13]​​ நோவாவுக்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும்​​ விதித்துள்ளார்,​​ மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும்,​​ ஆப்ரஹாம்,​​ மோஸஸ் மற்றும் ஜீஸஸுக்கு விதித்ததுமாவது: இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்,​​ மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள். அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் போலித்​​ தெய்வ வழி பாடு செய்பவர்கள் பெரும் சீற்றம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார். முற்றிலும் சரணடைந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.

 

[42:14]​​ முரண் நகையாக,​​ அவர்களிடம் அறிவு வந்ததற்குப்​​ பின்னர்தான் தங்களுக்கிடையே பொறாமை மற்றும் சீற்ற உணர்வின் காரணமாக,​​ அவர்கள் பிரிவுகளாகச் சிதறிப் போனார்கள். வரையறுக்கப்பட்டதொரு தவணைவரை அவர்களுக்கு அவகாசமளிப்பதென உம் இரட்சகரிடமிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானம் இல்லாதிருந்தால்,​​ அவர்கள்​​ உடனடியாகத் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள். உண்மையில்,​​ வேதத்திற்கு வாரிசுகளான பிந்திய தலைமுறையினர் முற்றிலும் ஐயங்களுடனே இருக்கின்றனர்.

.

[42:15]​​ இதனைத்தான் நீர் பிரச்சாரம் செய்ய வேண்டும்,​​ மேலும் செய்துவர வேண்டுமென உமக்கு கட்டளையிடப்பட்டவற்றை உறுதிப்பாட்டுடன் கடைப்பிடிப்பீராக,​​ மேலும் அவர்களுடைய ஆசைகளைப் பின்பற்றாதீர். மேலும் பிரகடனிப்பீராக: கடவுள்-ஆல் இறக்கி அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களிலும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக்கிடையில் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். கடவுள்தான் எங்களுடைய இரட்சகரும் உங்களுடைய இரட்சகருமாவார். எங்களுடைய செயல்கள் எங்களுக்கு,​​ மேலும் உங்களுடைய செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. கடவுள் நம் அனைவரையும் ஒன்றாகத் திரட்டுவார்;​​ இறுதிவிதி அவரிடமே உள்ளது.

 

[26:105]​​ நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்பமறுத்தனர்.

 

[21:76]​​ மேலும்,​​ அதற்கு முன்னர்,​​ நோவா அழைத்தார்,​​ நாம் அவருக்கு பதிலளித்தோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெரும் பிரளயத்திலிருந்து நாம் காத்தோம்.

 

[71:1]​​ நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: வலி நிறைந்ததொரு தண்டனை அவர்களை வருத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்.

 

​​ [71:2]​​ அவர் கூறினார்,​​ என் சமூகத்தாரே,​​ நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவனாக இருக்கின்றேன்.

 

[11:25]​​ நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம், “நான்​​ தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் வந்துள்ளேன்”​​ என்று கூறியவராக அனுப்பினோம்.

 

[23:23]​​ என் சமூகத்தாரே,​​ கடவுள்-ஐ வழிபடுங்கள். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியுடையோராக இருக்க மாட்டீர்களா?”​​ என்று கூறியவராக,​​ நோவாவை அவருடைய சமூகத்தாரிடம்​​ நாம் அனுப்பினோம்.

 

[71:3]​​ நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும்,​​ அவரிடம் பயபக்தியோடிருக்கவும்,​​ மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.

 

[7:59]​​ நாம் நோவாவை அவர் சமூகத்தாரிடம் அனுப்பினோம்,​​ அவர், “என் சமூகத்தாரே,​​ கடவுள்-ஐ வழிபடுங்கள்;​​ உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு​​ இல்லை,​​ அச்சுறுத்துகின்றதொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”​​ என்று கூறினார்.

 

[11:26]​​ நீங்கள் கடவுள்-ஐ அன்றி வழிபட வேண்டாம்,​​ வலிமிகுந்ததொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.

 

[26:106]​​ அவர்களுடைய சகோதரர் நோவா அவர்களிடம் கூறினார், “நீங்கள் நன்னெறியாளர்களாக ஆகமாட்டீர்களா?

 

[7:60]​​ அவருடைய சமூகத்தாரில் இருந்த தலைவர்கள் ​​​​ கூறினர்​​ மிக​​ நெடிய​​ வழிதவறுதலில் இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.​​ 

[7:61]​​ அவர் கூறினார்,​​ என் சமூகத்தாரே,​​ நான் வழிதவறியவனாக இல்ல;​​ நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.

[7:62] ​​​​ என் இரட்சகருடைய​​ தூதுச் செய்திகளை நான் உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன்,​​ மேலும் நான் உங்களுக்கு அறிவுறுத்துகின்றேன்,​​ மேலும் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன்.

[7:63]​​ நீங்கள் கருணையை அடையும் பொருட்டு உங்களை எச்சரிப்பதற்காகவும் ​​ நன்னெறியின் பால்​​ உங்களை வழிநடத்துவதற்காகவும்,​​ உங்களைப் போன்ற ஒரு மனிதன் மூலம்,​​ உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல் வருவதுதென்பது மிகவும் ஆச்சர்யமான​​ ஒன்றாக ​​​​ இருக்கின்றதா?”

 

[26:107]​​ நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.

 

[26:108]​​ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

 

[26:109]​​ உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து​​ வருகின்றது.

 

[26:110]​​ நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

 

[71:4]​​ அப்போது அவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு​​ மன்னித்து விடுவார்,​​ மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத்திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார்.​​ ிக​​ நிச்சயமாக,​​ கடவுள்-ன் நிர்ணையமனமானது,​​ அதற்குரிய நேரம் வந்துவிட்டவுடன்,​​ ஒருபோதும் தாமதிக்கப்பட இயலாது​​ நீங்கள்​​ மட்டும்​​ அறிந்திருந்தால்”.

 

[23:24]​​ அவருடைய சமூகத்தாரில் உள்ள நம்பமறுத்த தலைவர்கள் கூறினர், “இவர் உங்களுக்கிடையில் முக்கியத்துவம் அடைய விரும்புகின்ற,​​ உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. கடவுள் நாடியிருந்தால்,​​ அவர் வானவர்களைக் கீழே அனுப்பியிருக்க முடியும். நம்முடைய முன்னோர்களிடமிருந்து இது போன்ற எதையும் நாம் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை.

[23:25] “இவர்​​ பித்துப் பிடித்து போன​​ ஒரு மனிதர் அவ்வளவுதான். சிறிது காலத்திற்கு அவரைச் சற்று அலட்சியப்படுத்தி விடுங்கள்.

 

[54:9]​​ அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத்தார் நம்பமறுத்தனர். நம்முடைய​​ ஊழியரை​​ அவர்கள் நம்பமறுத்தனர் மேலும்,​​ கூறினர்​​ கிறுக்கர்!​​ அவர் துன்புறுத்தப்பட்டார்.

 

[11:27]​​ அவருடைய​​ சமூகத்தாரில் இருந்த நம்ப மறுத்த தலைவர்கள், “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை என்றே நாங்கள் காண்கின்றோம்,​​ மேலும் உம்மை முதலில் பின்பற்றும் மக்கள் எங்களில் மிக மோசமானவர்களாக இருப்பதையே நாங்கள் காண்கின்றோம். எங்களுக்கு மேலாக எந்த​​ மேன்மையும் நீர் பெற்றிருக்கவில்லை என்பதையே நாங்கள் காண்கின்றோம். உண்மையில்,​​ நீங்கள் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்”​​ 

 

[26:111]​​ அவர்கள் கூறினார்கள்,​​ “எங்களுக்கிடையில் மிகவும் மோசமானவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டு இருக்கும்போது,​​ நாங்கள் எப்படி உங்களுடன் நம்பிக்கை கொள்ள இயலும்?”​​ 

 

[26:112]​​ அவர் கூறினார், “அவர்கள் என்ன செய்தார்கள் என நான் எப்படி அறிவேன்?

 

[26:113]​​ அவர்களுடைய தீர்ப்பு என் இரட்சகரிடம் மட்டுமே உள்ளது. உங்களால் உணர முடிந்தால்

 

[26:114]​​ நம்பிக்கையாளர்களை நான் ஒருபோதும்​​ வெளியேற்றிவிட மாட்டேன்.

 

[26:115]​​ நான் தெளிவு படுத்துகின்ற ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை.

 

​​ [11:28]​​ அவர் கூறினார்,​​ என் சமூகத்தாரே,​​ என் இரட்சகரிட மிருந்து ஓர் உறுதியான சான்றை நான் பெற்றிருந்தால்?​​ நீங்கள் அதனைக் காண முடியாத​​ போதிலும்,​​ தனது கருணையிலிருந்து என்னை அவர் ஆசீர்வதித்திருந்தால்?​​ இதன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு நாங்கள் உங்களை நிர்பந்திக்கவா போகின்றோம்?

 

​​ [11:29]​​ என் சமூகத்தாரே,​​ உங்களிடம் நான் பணம் எதுவும் கேட்கவில்லை;​​ எனக்குரிய கூலி கடவுள் வசமிருந்தே​​ வருகின்றது. நம்பிக்கை கொண்டோரை நான் வெளியேற்றி விடமாட்டேன்;​​ அவர்கள் தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பார்கள் (மேலும் அவர் மட்டுமே அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்). அறியாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்.

 

​​ [11:30]​​ என் சமூகத்தாரே,​​ அவர்களை நான் வெளியேற்றி விட்டால்,​​ கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிக்க யாரால் முடியும்?​​ நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?

 

​​ [11:31]​​ கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் சொந்தமாகக் கொண்டுள்ளேன் என்று நான் உரிமை கோர வில்லை,​​ அன்றி எதிர்காலத்தையும் நான் அறிய மாட்டேன்,​​ அன்றி நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை,​​ மேலும் உங்களுடைய கண்களுக்கு இழிவானவர்கள் மீது,​​ பாக்கியங்கள் எதையும் கடவுள் அருளமாட்டார் என்றும் நான் கூறவில்லை. அவர்களுடைய உள்ளார்ந்த எண்ணங்களில் இருப்பது என்ன என்பதைக் கடவுள் நன்கறிவார். (இதனை நான் செய்தால்) நான் வரம்புமீறியவன் ஆகிவிடுவேன்.

​​ 

[10:71]​​ நோவாவின் வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக. அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார்,​​ என் சமூகத்தாரே,​​ எனது நிலையும் கடவுள்-ன் வெளிப்பாடுகளைப் பற்றிய எனது நினைவூட்டுதல்களும் உங்களுக்கு மிகவும் அதிகமானதாகக் தென்படுமானால்,​​ அப்போது நான் எனது பொறுப்பைக்​​ கடவுள்-யிடம் ஒப்படைத்து விடுகின்றேன். நீங்கள் உங்கள் தலைவர்களுடன் ஒன்று கூடிக்கலந்து,​​ உங்களுக்கிடையில் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு ஒத்துவாருங்கள்,​​ பின்னர் தாமதமின்றி அதனை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

 

​​ [10:72]​​ நீங்கள் திரும்பிச் சென்று விட்டால்,​​ பின்னர் நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி கடவுள்-யிடமிருந்து வருகின்றது. சரணடைந்த ஒருவனாக இருக்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

 

​​ [11:32]​​ அவர்கள் கூறினர்,​​ நோவாவே,​​ நீர் எங்களுடன் வாதித்தீர்,​​ மேலும் தொடர்ந்து வாதித்துக் கொண்டே​​ இருந்தீர். நீர் உண்மையாளராக இருந்தால்,​​ எங்களிடம் நீர் பயமுறுத்துகின்ற அந்த அழிவைக் கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்.

 

​​ [11:33]​​ அவர் கூறினார்,​​ கடவுள் ஒருவர்தான் அதனை உங்களிடம் கொண்டு வருபவர்,​​ அவர் அவ்விதம் நாடினால்,​​ அப்போது நீங்கள் தப்பித்து விட முடியாது.

 

​​ [11:34]​​ நான் உங்களுக்கு உபதேசம் செய்தாலும்,​​ உங்களை வழிகேட்டில் அனுப்ப வேண்டும் என்பது கடவுள் நாட்டமாகயிருப்பின்,​​ என்னுடைய உபதேசம் உங்களுக்குப் பயனளிக்காது. அவரே உங்கள் இரட்சகர்,​​ மேலும் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.

 

​​ [11:35]​​ அவர்கள் இந்தக் கதையை இவர் உருவாக்கிக் கொண்டார் என்று கூறுவார்களாயின்,​​ அப்போது கூறும்,​​ இதனை நான் உருவாக்கியிருப்பேனாயின்,​​ பின்னர் என் குற்றத்திற்கு நானே பொறுப்பாவேன்,​​ மேலும் நீங்கள் செய்யும் எந்தக் குற்றத்திற்கும்,​​ நான் குற்றமற்றவன்ஆவேன்.

 

​​ [26:116]​​ அவர்கள் கூறினர்,​​ நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால்,​​ நோவாவே,​​ நீர் கல்லாலடித்துக் கொல்லப்படுவீர்.

 

​​ [54:10]​​ அவர் தன் இரட்சகரை இறைஞ்சினார்,​​ நான் அடக்கு முறை செய்யப்பட்டவனாக இருக்கின்றேன்;​​ எனக்கு வெற்றியை அளிப்பீராக.

 

​​ [23:26]​​ அவர் கூறினார்,என் இரட்சகரே,​​ அவர்கள்​​ என்னை நம்பமறுத்து விட்டதால்,​​ எனக்கு வெற்றியை வழங்குவீராக.

 

​​ [26:117]​​ அவர் கூறினார்,​​ என் இரட்சகரே,​​ என் சமூகத்தார் என்னை நம்பமறுத்து விட்டனர்.

 

​​ [71:5]​​ அவர் கூறினார்,​​ என் இரட்சகரே,​​ இரவும் பகலும் என் சமூகத்தாரை நான் அழைத்து விட்டேன்.

 

​​ [71:6]​​ ஆனால்​​ என்னுடைய அழைப்பு அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தது.

 

​​ [71:7]​​ உம்மால் மன்னிக்கப்படுவதற்காக அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம்,​​ அவர்கள் தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை வைத்துக் கொண்டனர்,​​ தங்களுடைய ஆடைகளினால் தங்களை மூடிக் கொண்டனர்,​​ பிடிவாதம்​​ செய்தனர்,​​ மேலும் ஆணவம் கொண்டவர்களானார்கள்.

 

​​ [71:8]​​ பின்னர் அவர்களை நான் பகிரங்கமாக அழைத்தேன்.

 

​​ [71:9]​​ பின்னர் அவர்களுக்கு நான் உரக்கப் பிரகடனித்தேன். மேலும் அந்தரங்கமாகவும் நான் அவர்களிடம் பேசினேன்.

 

​​ [71:10]​​ நான் கூறினேன், ‘உங்கள்​​ இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்;​​ அவர் மன்னிக்கின்றவர்.

​​ 

[71:11]​​ பின்னர் அவர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.

 

 

[71:12]​​ ‘மேலும் பணத்தையும் பிள்ளைகளையும்,​​ மேலும் பழத் தோட்டங்களையும்,ஊற்றுகளையும் உங்களுக்கு வழங்குவார்.

 

[71:13]​​ நீங்கள் ஏன் கடவுள்-யிடம் பக்தியோடிருக்க முனையக்கூடாது?

[71:14]​​ அவர்தான் உங்களைப் பல கட்டங்களில் படைத்தவர்.

 

[71:15]​​ ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக்காகப் படைத்தார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?

 

[71:16]​​ அதிலே ஒரு வெளிச்சமாக இருப்பதற்காகச் சந்திரனை அவர் வடிவமைத்தார்,​​ மேலும் ஒரு விளக்காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.

 

[71:17]​​ மேலும் பூமியிலிருந்து செடிகளைப் போல் கடவுள் உங்களை முளைவிடச் செய்தார்.

 

[71:18]​​ பின்னர் அதற்குள்ளேயே உங்களை அவர் திருப்புகின்றார்,​​ மேலும் நிச்சயமாக அவர் உங்களை வெளியில்​​ கொண்டு வருவார்.

 

[71:19]​​ பூமியைக் கடவுள் உங்களுக்கு வசிக்கத்தக்கதாக ஆக்கினார்.

 

[71:20]அதிலே நீங்கள் சாலைகளை அமைத்துக் கொள்ளும் வண்ணம்.

 

[71:21]​​ நோவா கூறினார்,​​ என் இரட்சகரே,​​ அவர்கள் எனக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்,​​ மேலும் பணமும் பிள்ளைகளும் கொண்டு​​ ஆசீர்வதிக்கப்பட்ட போது,​​ இன்னும் அதிகமாகச் சீர்கெட்டுப் போனவர்களைப் பின் பற்றினர்.

 

[71:22]​​ பயங்கரமான சூழ்ச்சிகளை அவர்கள் தீட்டினர்

 

[71:23]​​ அவர்கள் கூறினர், ‘உங்களுடைய தெய்வங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வத்,​​ சுவாஆ,​​ யாகூத்,​​ யாஊக்,​​ மற்றும் நஸ்ரைக் கைவிட்டு விடாதீர்கள்.

 

[71:24]​​ அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். எனவே,​​ தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்து விடுவீராக.

 

[71:26]​​ நோவா மேலும் கூறினார்,​​ என் இரட்சகரே,​​ பூமியில் ஒரே ஒரு நம்பமறுப்பவனைக் கூட விட்டு விடாதீர்.

 

[71:27]​​ ஏனெனில்,​​ நீர் அவர்களை​​ விட்டு வைத்தால்,​​ அவர்கள் உம்முடைய ஊழியர்களை வழிகெடுக்க மட்டுமே செய்வார்கள்,​​ மேலும் தீயோரான நம்பமறுப்பவர்களைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பெற்றெடுக்க மாட்டார்கள்.

 

[71:28]​​ என் இரட்சகரே,​​ என்னையும் என் பெற்றோரையும்,​​ மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொருவரையும்,​​ மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக. ஆனால் நம்பமறுப்பவர்களுக்கு அழிவைத் தவிர எந்த ஒன்றையும் தந்து விடாதீர்.

 

[26:118]​​ அவர்களுக்கெதிராக எனக்கு வெற்றியை வழங்குவீராக,​​ மேலும் என்னையும் நம்பிக்கை கொண்ட என் குழுமத்தையும் காப்பீராக.

 

[23:26]​​ அவர் கூறினார்,​​ என் இரட்சகரே,​​ அவர்கள் என்னை நம்பமறுத்து விட்டதால்,​​ எனக்கு வெற்றியை வழங்குவீராக.

 

[37:75]​​ இவ்விதமாக,​​ நோவா நம்மை அழைத்தார்,​​ மேலும் நாமே சிறப்பாக மறுமொழியளிப்பவர்களாக இருந்தோம்.

 

[11:36]​​ நோவாவுக்கு​​ உள்ளுணர்வு அளிக்கப்பட்டது: ஏற்கனவே நம்பிக்கை கொண்டோரைத் தவிர உமது சமூகத்தாரில் எவரும் இதற்கு அப்பால் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. அவர்களுடைய செயல்களால் துக்கமடையாதீர்.37.​​ நமது கவனமிக்க பார்வையின் கீழ்,​​ நமது உள்ளுணர்வின்படி,​​ படகைக்கட்டும்,​​ மேலும் வரம்பு மீறியோரின் சார்பாக என்னிடம் இறைஞ்சாதீர்,​​ அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டுமென விதிக்கப் பட்டுள்ளனர்.

 

[11:37]​​ நமது கவனமிக்க பார்வையின் கீழ்,​​ நமது உள்ளுணர்வின்படி,​​ படகைக் கட்டும்,​​ மேலும் வரம்பு மீறியோரின் சார்பாக என்னிடம் இறைஞ்சாதீர்,​​ அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளனர்.

 

[23:27]​​ பின்னர் நாம் அவருக்கு உள்ளுணர்வூட்டினோம்: நம்முடைய விழிப்பான கண்களின் கீழ்,​​ மேலும் நம் முடைய உள்ளுணர்வூட்டலின்படி படகைக்* கட்டுவீராக. நமது கட்டளை வரும்போது,​​ மேலும் வளி மண்டலம் கொதிப்படையும் போது, (உம்முடைய​​ வீட்டுப் பிராணிகளில்) ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியையும்,​​ அழிக்கப்படுவார்கள் எனக் கண்டனம் செய்யப்பட்டவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும் அதில் இட்டுக் கொள்வீராக. வரம்புமீறியவர்கள் சார்பாக என்னிடம் பேசாதீர்;​​ அவர்கள் மூழ்கடிக்கப் படுவார்கள்.

*23:27​​ கதை​​ சொல்பவர்கள் நோவாவின் சரித்திரத்தைக் கேலிக்குரியதாக ஆக்கி விட்டார்கள். நோவாவின் படகு,​​ மரக் கட்டைகளால் செய்யப்பட்டு,​​ சாதாரணமான கயிறுகளால் ஒன்றாகக் கட்டப்பட்ட தட்டையானதொரு மரக்கலமோயாகும். அவ்வெள்ளம் சாக்கடல் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே ஏற்பட்டது,​​ மேலும் அந்தப் பிராணிகள் நோவாவால் வளர்க்கப்பட்ட வீட்டுப் பிராணிகளே.

 

[23:28]​​ உம்முடன் இருப்பவர்களோடு சேர்ந்து,​​ படகின் மீது நீர் அமர்ந்துவிட்டவுடன், ‘பாவிகளான மக்களிட மிருந்து நம்மைக் காத்ததற்காக,​​ கடவுள்-ஐப் புகழுங்கள்,’​​ என்று நீர் கூற வேண்டும்.

 

[23:29]​​ மேலும் கூறுவீராக, ‘என்னுடைய இரட்சகரே,​​ பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரையிறங்கச் செய்வீராக;​​ கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்.

 

[11:38]​​ அவர் படகைக் கட்டிக் கொண்டிருக்கும் போது,​​ அவருடைய சமூகத்தார் அவரைக் கடந்து சென்ற போதெல்லாம் அவரைப்​​ பார்த்து நகைத்தனர். அவர் கூறினார்,​​ எங்களைப் பார்த்து நீங்கள் நகைக்கலாம்,​​ ஆனால் நீங்கள் நகைப்பதைப் போலவே,​​ நாங்களும் உங்களைப் பார்த்து நகைக்கின்றோம்.

 

[11:39]​​ இழிவு மிக்கதோர் வேதனையை அனுபவிக்கவும்,​​ நிலைத்திருக்கும் ஒரு தண்டனைக்கு உள்ளாகவும் போவது யார் என்பதை​​ நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்.

 

[11:40]​​ நமது தீர்ப்பு வந்து,​​ வளிமண்டலம் கொதித்த போது,​​ நாம் கூறினோம்,​​ கண்டனத்திற்குள்ளானோரைத் தவிர,​​ ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியை* சுமந்து கொண்டு,​​ உம்முடைய குடும்பத்தாருடன் செல்லும். நம்பிக்கை கொண்டோரை உம்முடன் சுமந்து செல்லும். மேலும் அவருடன் நம்பிக்கை கொண்டோர் மிகச் சிலர் மட்டுமே.

11:40 & 44​​ இது நிரூபிக்கப்பட்ட கடவுளின் சத்தியமாகும்: நோவாவின் படகு சாதாரணமான கயிறுகளால் ஒன்றினைத்துக் கட்டப்பட்ட மரக்கட்டைகளால் ஆனது பொதுவான கருத்துக்கு மாற்றமாக,​​ அவ்வெள்ளம் இன்றைய சாக்கடலைச்​​ சுற்றியுள்ள பகுதிகள் வரை மட்டுமே இருந்தது,​​ மேலும் அந்தப் பிராணிகள் நோவாவின் கால் நடைகள் மட்டுமே,​​ பூமியில் வாழ்ந்த எல்லாப் பிராணிகளும் அல்ல.

 

[11:41]​​ அவர் கூறினார்,​​ வந்து படகில் ஏறிக் கொள்ளுங்கள். இது மிதந்து செல்வதும்​​ நங்கூரமிடப்படுவதும் கடவுள் பெயராலேயே ஆகும். என் இரட்சகர் மன்னிப்பவர்,​​ மிக்க கருணையாளர்.

 

[54:11]​​ பின்னர் நாம் தண்ணீரை ஊற்றியவண்ணம்,​​ வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம்.

 

[54:12]​​ மேலும் நாம் பூமியிலிருந்து ஊற்றுகளைப் பொங்கி வரச்செய்தோம். முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானத்தைச் செயல்படுத்த நீர்பரப்புகள் ஒன்று கலந்தன.

 

[54:13]​​ கட்டைகளாலும் கயிறுகளாலும் செய்யப்பட்ட ஒரு படகில் அவரை நாம் சுமந்து கொண்டோம்.

 

[54:14]​​ நம்முடைய விழிப்பான கண்களின் கீழ் அது ஓடியது;​​ நிராகரிக்கப்பட்ட ஒருவருக்குரிய ஒரு வெகுமதி.

 

[11:42]​​ மலைகளைப் போன்ற அலைகளின் மீது அவர்களுடன் அது மிதந்து சென்ற போது,​​ பிரிந்திருந்த அவருடைய மகனை நோவா அழைத்தார்: என் மகனே,​​ வந்து எங்களுடன் ஏறிக்கொள்;​​ நம்பமறுப்போருடன் இருக்காதே.

 

[11:43]​​ அவன் கூறினான்,​​ தண்ணீரில் இருந்து என்னைக் காத்துக் கொள்ள,​​ ஒரு மலையின் மீது நான் புகலிடம் எடுத்துக் கொள்வேன். அவர் கூறினார்,​​ இன்றைய தினம் கடவுள்-ன் தீர்ப்பிலிருந்து எவரையும் எதுவும் காப்பாற்றி விடாது;​​ அவருடைய கருணைக்குத் தகுதியானவர்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவர்). அலைகள் அவர்களைப் பிரித்தன,​​ மேலும் மூழ்கியவர்களோடு அவன் இருந்தான்.

 

[11:44]​​ பிரகடனம் செய்யப்பட்டது: பூமியே,​​ உனது தண்ணீரை விழுங்கிவிடு,​​ மேலும் வானமே,​​ நிறுத்து. பின்னர் தண்ணீர் வற்றியது;​​ தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. இறுதியில் படகு *ஜுதி குன்றுகளில் தங்கியது.* அப்போது இது பிரகடனம் செய்யப்பட்டது:​​ வரம்புமீறியவர்கள் அழிந்து போனார்கள்.

 

[7:64]​​ அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர்,​​ அதன்விளைவாக,​​ அவரையும் மரக்கலத்தில் அவருடன் இருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம்,​​ அத்துடன் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்தவர்களை மூழ்கடித்தோம்;​​ அவர்கள் குருடர்களாக இருந்தனர்.

[10:73]​​ அவர்கள் அவரை ஏற்கமறுத்தனர்,​​ அதன் விளைவாக,​​ நாம் அவரையும் மரக்கலத்தில் அவரோடு சேர்ந்து கொண்டவர்களையும் காப்பாற்றினோம்;​​ நாம் அவர்களை வாரிசுகளாக்கினோம். மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்கமறுத்தவர்களை நாம் மூழ்கடித்தோம். விளைவுகளைக் கவனித்துப்பார்ப்பீராக;​​ அவர்கள்​​ எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.

 

[26:119]​​ அவரையும் சுமை நிரம்பிய படகில் அவருடன் கூட இருந்தவர்களையும் நாம் கரை சேர்த்தோம்

 

[26:120]​​ பின்னர் மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.

 

[37:76]​​ அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மகத்தான பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்

 

[37:77]​​ உயிருடன் தப்பியவர்களாக அவருடைய சகாக்களை நாம் ஆக்கினோம்.

 

[71:25]​​ அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர்,​​ மேலும் நரகநெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுள்-யிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவியாளர்கள் எவரையும் அவர்கள்​​ காணவில்லை.

 

[11:45]​​ நோவா தன் இரட்சகரை இறைஞ்சினார்: என் இரட்சகரே,​​ என் மகன் என் குடும்பத்தின் ஓர் அங்கத்தினன் ஆவான்,​​ மேலும் உமது வாக்குறுதி சத்தியமானது. ஞானம் உடையோரில் நீரே மிகுந்த ஞானம் உடையவர்.

 

[11:46]​​ அவர் கூறினார்,​​ நோவாவே,​​ அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். நீர் அறியாத எதை யேனும் என்னிடம் கேட்பது நன்னெறியல்ல* நீர் அறியாதவர்களைப் போல் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு,​​ நான் உமக்கு அறிவுறுத்துகிறேன்.

 

*11:46​​ சிபாரிசு என்பது மனிதர்களை போலித்தெய்வ வழிபாட்டின் பால் மயக்கி இழுத்துச்செல்வதற்கு சாத்தானின் திறன் மிக்கதொரு தூண்டில் இரையாகும். இருப்பினும்,​​ ஆப்ரஹாம் தன் தந்தைக்கு உதவி செய்ய முடியவில்லை,​​ அன்றியும் நோவா தன்னுடைய மகனுக்கும் முஹம்மத் தன் சொந்த உறவினர்களுக்கும் உதவி செய்ய முடியவில்லை​​ 

[11:47]​​ அவர் கூறினார்,​​ என் இரட்சகரே,​​ நான் அறியாத எந்த ஒன்றையும் மீண்டும் நான் உம்மிடம் இறைஞ்சா மலிருக்கும் பொருட்டு,​​ உம்மிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீர் என்னை மன்னித்து,​​ மேலும் என்மேல் கருணை கொண்டாலே அன்றி,​​ நான் நஷ்டமடைந்தோருடனே இருப்பேன்.

 

[11:48]​​ பிரகடனம் செய்யப்பட்டது: நோவாவே,​​ உம்மீதும்​​ உம்முடனிருக்கும் தோழர்களின் சந்ததியிலிருந்து தோன்றும் தேசங்களின் மீதும் சாந்தியுடனும் ஆசிகளுடனும் நீர் கரையிறங்குவீராக. உங்கள் சந்ததியில் தோன்றும் மற்ற தேசங்களைப் பொறுத்த வரை,​​ நாம் அவர்களைச் சிறிது காலம் ஆசீர்வதிப்போம்,​​ பின்னர் அவர்களை வலி மிகுந்த தண்டனைக்கு உள்ளாக்குவோம்.

 

[29:14]​​ நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்,​​ மேலும் அவர் ஐம்பது குறைவாக,*​​ ஆயிரம் வருடங்கள் அவர்களுடன் வாழ்ந்திருந்தார். அதன் பின்னர்,​​ அவர்களுடைய வரம்புமீறல்களின் காரணமாக அவர்கள் பிரளயத்திற்கு உள்ளானார்கள்.

 

[11:49]​​ இது,​​ கடந்த காலத்தில் இருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தி ஆகும். அவற்றைப் பற்றி நீர் எவ்வித அறிவும் பெற்றிருக்கவில்லை. - நீரோ அல்லது உம் சமூகத்தாரோ - இதற்கு முன்னர். எனவே,​​ பொறுமையுடன் இருப்பீராக. இறுதி வெற்றி நல்லோருக்கே உரியது.

 

[26:121]​​ இது ஒரு படிப்பினையாகத்​​ திகழவேண்டும்,​​ ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

 

[29:15]​​ அவரையும் மரக்கலத்தில் அவருடன் கூட இருந்த வர்களையும் நாம் காப்பாற்றினோம்,​​ மேலும் மக்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.

 

[37:78]​​ மேலும் பின்வரும்​​ தலைமுறையினருக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.

 

[37:79]​​ மக்களில் நோவாவின் மீது சாந்தி நிலவுவதாக.

 

[37:80]​​ இவ்விதமாகவே நாம் நன்னெறியாளர்களுக்கு வெகுமதியளிக்கின்றோம்.

[37:81]​​ நம்பிக்கை கொண்ட நம்முடைய ஊழியர்களில் அவர் ஒருவர் ஆவார்.

 

[37:82]​​ மற்றவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

 

[54:15]​​ அதனை ஒரு படிப்பினையாக நாம் அமைத்தோம்.உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?

 

[54:16]​​ எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!

 

[54:17]​​ கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?

 

[23:30]​​ இவை உங்களுக்குப் போதிய சான்றுகளை வழங்க வேண்டும். நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம்.

 

[26:122]​​ மிக நிச்சயமாக,​​ உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர,​​ மிக்க கருணையாளர்

 

Download this file