​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ ZAKAT -​​ ஜகாத்​​ 
 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ 





ஜகாத் என்றால் என்ன?

ஜகாத் என்றால்​​ கடமையான தர்மம்​​ .​​ இஸ்லாம்​​ (அடிபணிதல்)​​ மார்க்கத்தின்​​ முக்கிய​​ கடமைகளில்​​ ஒன்று.


ஜகாத் கடமை எப்போது வெளிப்படுத்தப்பட்டது?​​ குர்ஆனுக்கு முன்பு ஜகாத் முறைகள் உள்ளதா?

ஆம்,​​ மார்க்கத்தின் மற்ற கடமைகள் போன்று ஜகாத்தும் குர்ஆனுக்கு முன்பு,​​ அதாவது இப்ராஹீம் நபி மூலமாக கடவுள் நமக்கு​​ கடமையாற்றியுள்ளார் என்று குர்ஆன் மூலமாக கடவுள் நமக்கு கற்றுத் தருகிறார்.

குர்ஆனுக்கு முன்பு ஜகாத் முறைகள் கடைப்பிடிக்கப்பட்டது என்று நாம் குர்ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம்.​​ 
ஆப்ரஹாம்​​ (21:72-73, 22:78, 16:123).​​ ​​ 
ஜீஸஸ்​​ (இயேசு)​​ (19:31)​​ 
இஸ்மாயில்​​ (19:55)​​ 
இஸ்ரேலியர்கள்​​ (2:83, 5:12).​​ 

ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சேர்ப்பித்தவர்

[21:73]​​ நம்முடைய கட்டளைகளுக்கேற்ப வழிநடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம்,​​ மேலும் நன்மைகள் செய்வது எப்படி என்பதையும், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்)*​​ கடமையான தர்மத்தையும் கடைப்பிடிப்பது எப்படி என்பதையும்​​ நாம் அவர்களுக்குக்​​ கற்றுக் கொடுத்தோம். நமக்கு,​​ அர்ப்பணித்துக் கொண்ட அடியார்களாக அவர்கள் இருந்தனர்.

22:78​​ நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவர் நிமித்தமாக நீங்கள் பாடுபட​​ வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்,​​ மேலும்​​ உங்கள் தந்தை​​ ஆப்ரஹாமின்​​ மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப்​​ பயில்வதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் முதலில் உங்களுக்கு "சரணடைந்தோர்" எனப் பெயரிட்டார். இப்படியாக,​​ தூதர் உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகத் திகழ வேண்டும்,​​ மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாகத்​​ திகழவேண்டும்,​​ எனவே நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும்,​​ மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து வரவும்,​​ மேலும் கடவுள் -ஐ பற்றிக் கொள்ளவும் வேண்டும்;​​ அவர்தான் உங்கள் இரட்சகர்,​​ மிகச்சிறந்த இரட்சகர்,​​ மேலும் மிகச் சிறந்த ஆதரவாளர்.

19:55​​ தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்)​​ நிறைவேற்றும்படித் தன் குடும்பத்தாரை ஏவுபவராக அவர்​​ (இஸ்மாயில்)​​ இருந்தார்;​​ அவருடைய இரட்சகரிடம்,​​ ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.

19:31 "நான்​​ (ஜீஸஸ்)​​ செல்லுமிடமெல்லாம் என்னை அவர்​​ ஆசீர்வதித்துள்ளார்,​​ மேலும் நான் வாழும் காலமெல்லாம்​​ (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்) கடமையான தர்மத்தையும்​​ நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டுள்ளார்..

2:83 ​​ இஸ்ரவேலின் சந்ததியினருடன்​​ நாம் ஓர் உடன்படிக்கை செய்தோம்: "நீங்கள் கடவுள்-ஐத் தவிர வழிபடக் கூடாது. நீங்கள் உங்களுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்தவும்,​​ உறவினர்கள்,​​ அனாதைகள்,​​ மற்றும் ஏழைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும். நீங்கள் மனிதர்களை இணக்கத்துடன் நடத்திட வேண்டும். நீங்கள்​​ (ஸலாத்) தொடர்புத்​​ தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும்,​​ மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தை​​ கொடுக்கவும் வேண்டும்." ஆனால் உங்களில் சிலரைத் தவிர,​​ நீங்கள் திரும்பிச் சென்று விட்டீர்கள்,​​ மேலும் நீங்கள் வெறுப்புக் கொண்டவர்களாகி விட்டீர்கள்.

5:12 ​​ இஸ்ரவேலின்​​ சந்ததியினரிடமிருந்து​​ ஓர் உடன்படிக்கையைக் கடவுள் எடுத்திருந்தார்,​​ மேலும் அவர்களுக்கிடையில் பன்னிரண்டு வம்சத் தலைவர்களை நாம் எழுப்பினோம். மேலும் கடவுள் கூறினார், "நீங்கள்​​ (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடித்து, (ஜகாத்) கடமையான தர்மத்தைக்​​ கொடுத்து,​​ மேலும் என்னுடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் அவர்களைக் கண்ணியப்படுத்தி,​​ மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்கு இரவலாகத் தொடர்ந்து கொடுத்துவருகின்ற பட்சத்தில்,​​ நான் உங்களுடன் இருக்கின்றேன். பின்னர் நான் உங்களுடைய பாவங்களை நீக்குவேன்,​​ மேலும் பாய்கின்ற ஆறுகள் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பேன். இதன் பின்னரும் நம்பமறுக்கின்றவர் எவராயினும்,​​ உண்மையில் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்று விட்டார்."


ஜகாத்தின் முக்கியத்துவம்

[7:156] "மேலும் இந்த உலகிலும் அத்துடன் மறுவுலகத்திலும் எங்களுக்கு நன்மையை விதித்திடுவீராக. நாங்கள் உம்மிடம் வருந்துகின்றோம்." அவர் கூறினார், "நான் நாடுகின்ற எவர் மீதும் என்னுடைய தண்டனை ஏற்படும். ஆனால்​​ என்னுடைய கருணை​​ அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்து கொண்டுள்ளது. இருப்பினும்,​​ அதனை நான் இவர்களுக்கெனக் குறிப்பிட்டு​​ வைப்பேன், (1)​​ நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள், (2)​​ கடமையான (ஜகாத்) தர்மத்தைக் கொடுப்பவர்கள், (3)​​ நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்பவர்கள்,​​ மேலும்
​​ 
[24:56]​​ நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும்​​ (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்துவரவும்,​​ மேலும் தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்,நீங்கள்​​ கருணையை அடையும் பொருட்டு.

[9:71]​​ நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றொருவருக்குக் கூட்டாளிகளாக இருக்கின்றனர். அவர்கள் நன்மையை ஆதரிக்கின்றனர்,​​ அத்துடன் தீமையைத் தடுக்கின்றனர்,​​ அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றனர்,​​ மேலும் (ஜகாத்)​​ கடமையான தர்மத்தைக் கொடுக்கின்றனர்,​​ அத்துடன் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்கு அவர்கள் கீழ்ப்படிகின்றனர்.​​ இவர்கள் கடவுள்-ன்​​ கருணை கொண்டு பொழியப்படுவார்கள். கடவுள் எல்லாம் வல்லவர்,​​ ஞானம் மிகுந்தவர்.

[4:162]​​ அவர்களில் உள்ள அறிவில் நன்கு உறுதிப்பாடு கொண்டவர்களையும்,​​ நம்பிக்கை கொண்டவர்களையும் பொறுத்த வரை,​​ அவர்கள் உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும்,​​ மேலும் உமக்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். அவர்கள்​​ (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும்,​​ (ஜகாத்) கடமையான தர்மத்தைக்​​ கொடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்;​​ அவர்கள் கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்.​​ இத்தகையவர்களுக்கு மகத்தானதொரு பிரதிபலனை நாம் வழங்குகின்றோம்.

>​​ நன்னெறியாளர்கான​​ அளவுகோல்கள்​​ 2:177, 31:2-4
>​​ நம்பிக்கையாளர்களாக இருப்பதற்கு ​​​​ 23:4, 9:71, 27:2-3
>​​ இது நம் ஆன்மாவை பலப்படுத்தவும்​​ சுத்திகரிக்கவும் உதவுகிறது​​ 2:110, 33:33, 11:114
>​​ பாவங்களை சரிசெய்ய மற்றும் மீட்பைப் பெற உதவுகிறது​​ 9:103-104
>​​ கடவுளின் கருணையை அடைய​​ 7:156, 9:71, 24:56
>​​ அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை துக்கம் அடையவும் மாட்டார்கள்.​​ 2:277
>​​ மகத்தான பிரதிபலன்​​ 4:162
>​​ வழிநடத்தபட்டவர்களில் இருக்க​​ 9:18
>​​ சிறந்த மற்றும் தாராளமாக வெகுமதி​​ 73:29
>​​ கடவுளின் ஆசீர்வாதங்களுக்கான​​ நன்றி பாராட்டுதல்​​ 108-1-2

ஜகாத்​​ கொடுப்பதில் ஏதாவது சலுகை உண்டா?

ஒருவர் வருமான ஈட்டும் நபராக இருப்பின் ஜகாத் கொடுப்பதற்கு எந்தவித சலுகையும் குர்ஆனில் நம்மால் காணமுடியாது.

41:7 "(ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்காதவர்கள்,​​ மேலும் மறுவுலகத்தைக் குறித்து,​​ அவர்கள்​​ நம்பமறுப்பவர்களாக​​ இருக்கின்றனர்."

யார் யாருக்கு ஜகாத் கடமையாகும்?
வருமானம் ஈட்டும் அனைவருக்கும் ஜகாத் கடமையாகும்.  
3:134 அவர்கள் நல்ல காலங்களிலும் அவ்வண்ணமே கஷ்ட காலங்களிலும் தர்மத்திற்கெனக் கொடுப்பார்கள்.

தர்மம் செய்கின்ற ஆண்கள் தர்மம் செய்கின்ற பெண்கள்​​ (33:35,​​ 57:18)

யாருக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்?

2:215​​ (revelation order 87)​​ ​​ கொடுப்பதைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: கூறுவீராக, "நீங்கள் கொடுக்கின்ற தர்மம் பெற்றோர்கள்,​​ உறவினர்கள்,​​ அனாதைகள்,​​ ஏழைகள்,​​ மற்றும் பிரயாணத்திலிருக்கின்ற அந்நியர்களைச் சென்றடைய வேண்டும்." நீங்கள் செய்கின்ற எந்த நன்மையாயினும்,​​ கடவுள் அது குறித்து முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

17:26​​ (revelation order 50),​​ ​​ உறவினர்களுக்கும்,​​ தேவையுடையவர்களுக்கும்,​​ ஏழைகளுக்கும்,​​ வழிப்போக்கர்களுக்கும்,​​ உரிய தர்மத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்,​​ ஆனால் மிதமிஞ்சியும்,​​ ஊதாரித்தனமாகவும் இருக்கக் கூடாது.

பெற்றோர்கள்.
உறவினர்கள்.
அனாதைகள்.
ஏழைகள்.
பிரயாணத்திலிருக்கின்ற​​ அந்நியர்கள்.


எப்பொழுது ஜகாத் கொடுக்க வேண்டும்?
அறுவடை நாள் அன்றே வருமானம் ஈட்டும் நாளன்றே ஜகாத் கொடுக்க வேண்டும்​​ என்று கடவுள் நமக்கு​​ 6:141ல்​​ கட்டளையிடுகிறார்.

[6:141]​​ அவர்தான் பந்தலிடப்பட்ட மற்றும் பந்தலிடப்படாத தோட்டங்களையும்,​​ கிளைகளற்ற மரங்களையும்,​​ வெவ்வேறு ருசிகளுடைய பயிர்களையும்,​​ ஒலிவம்,​​ மற்றும் மாதுளைத் தோட்டங்களையும் நிர்மாணித்தவர் - ஒரே மாதிரியாக இருக்கின்ற பழங்கள்,​​ ஆயினும் மாறுபட்டவை. அவற்றின் பழங்களிலிருந்து உண்ணுங்கள்,​​ அத்துடன் அதற்குரிய தர்மத்தை​​ அறுவடை நாள் அன்றே​​ கொடுத்து விடுங்கள்,​​ மேலும் எந்த ஒன்றையும் வீணடிக்காதீர்கள். வீணடிப்பவர்களை அவர் நேசிப்பதில்லை.

ஜகாத் தர்மம் எந்த அளவுக்கு முக்கியமானதெனில்,​​ மிக்க கருணையாளர் அதனைக் கொடுப்பவர்களுக்கே​​ தன்னுடைய கருணை எனவரையறுத்துள்ளார்​​ (7:156).​​ இருப்பினும், ​​ முஸ்லிம்களில் பெரும்பாலோர் அடிப்படையற்ற​​ ஹதீஸ்களை பின்பற்றி​​ மிக முக்கியமான இந்தக்​​ கட்டளையைத் தவற விட்டு விட்டனர்;​​ அவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஜகாத்தைக் கொடுக்கின்றனர் "நாம் வருமானத்தைப் பெறுகின்ற நாள் அன்றே" ஜகாத் கொடுக்கப்பட்டு விடவேண்டும் என்பதை இங்கே நாம் காண்கின்றோம்.

எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும்?

நிகர வருமானத்தில்​​ 2.5%

மார்க்கத்தின் மற்ற கடமைகள் மாதிரி ஜக்காத்​​ 2.5%​​ தான் கொடுக்க வேண்டும் என்று​​ இப்ராஹிம்​​ நபி​​ காலத்திலிருந்து வழிமுறையாக உள்ளது.​​ 

முஹம்மது நபி காலத்தில் ஜக்காத்​​ 2.5%​​ தான் கொடுக்கவேண்டும் என்று நடைமுறையில் இருந்ததால் கடவுள் ஜகாத்தை குறிப்பிடும்போது அது யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று மட்டுமே அறிவிக்கின்றார்.

ஆப்ரஹாமின் மூலமாக நம்மிடம் வந்துள்ள விகிதாச்சாரமானது நம்முடைய நிகர வருமானத்தில்​​ 2.5%

ஸதகா​​ என்றால் என்ன?​​ 

கடவுள் நமக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும் என்று இருக்கின்ற போதிலும்,​​ அதிகப்படியான நன்மைகள் பெறுவதற்கு​​ ஸதகா(தர்மம்)”​​ என்னும் கதவை நமக்காக​​ திறந்து வைத்துள்ளார். ​​ 

மிகச்சிறந்த முதலீடு​​ (1 = 700​​ மேல்)
2:261​​ கடவுள்-ன் நிமித்தம் தங்களுடைய​​ பணங்களைச்​​ செலவிடுபவர்களுக்குரிய உதாரணமாவது ஒவ்வொரு கதிரிலும் ஒரு நூறு தானியங்களைக் கொண்ட,​​ ஏழு கதிர்களை முளைப்பிக்கின்ற ஒரு விதையைப் போன்றதாகும். தான்​​ நாடுகின்ற எவருக்கும் கடவுள் இதனைப் பன்மடங்காகப் பெருக்குகின்றார். கடவுள் கொடையளிப்பவர்,​​ அறிந்தவர்.

யாருக்கு ஸதகா(தர்மம்)​​ கொடுக்க வேண்டும்?
>​​ ஏழைகள்
>​​ தேவையுடையவர்கள்
>​​ அவற்றைத் திரட்டுகின்ற பணியாளர்கள்
>​​ புதிதாக மதம் மாறியவர்கள்
>​​ அடிமைகளை விடுதலை செய்வதற்கு
>​​ திடீர் செலவினங்களால் சுமத்தப்பட்டவர்களுக்கு
>​​ கடவுள்-ன் நிமித்தமாக,​​ மற்றும் பயணத்திலுள்ள அந்நியர்களுக்கு
>​​ உறவினர்களுக்கும்
>​​ அனாதைகளுக்கும்
>​​ யாசிப்பவர்களுக்கும்
>​​ கடவுள்-ன் நிமித்தம் கஷ்டப்பட்டுக் கொண்டு,​​ மேலும் புலம் பெயர இயலாத ஏழைகளுக்கு

- 9:60,​​ 2:177,​​ 2:273.


9:60​​ தர்மங்களானவை,​​ ஏழைகள்,​​ தேவையுடையவர்கள்,​​ அவற்றைத் திரட்டுகின்ற பணியாளர்கள்,​​ புதிதாக மதம் மாறியவர்கள்,​​ அடிமைகளை விடுதலை செய்வதற்கு,​​ திடீர் செலவினங்களால் சுமத்தப்பட்டவர்களுக்கு,​​ கடவுள்-ன் நிமித்தமாக,​​ மற்றும் பயணத்திலுள்ள​​ அந்நியர்களுக்குச் சென்றிட வேண்டும்.​​ கடவுள்-ன் கட்டளை இதுவேயாகும். கடவுள் சர்வமும் அறிந்தவர்,​​ ஞானம் மிகுந்தவர்.

2:177​​ நன்னெறி என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கையோ அல்லது மேற்கையோ நோக்கித் திருப்பிக் கொள்வது அல்ல. நன்னெறியாளர்கள் எவரென்றால் கடவுள்,​​ இறுதிநாள்,​​ வானவர்கள்,​​ வேதம்,​​ மற்றும் நபிமார்கள் மீது நம்பிக்கை கொள்பவர்களேயாவர்;​​ மேலும் அவர்கள்​​ உறவினர்களுக்கும்,​​ அனாதைகளுக்கும்,​​ தேவையுடையவர்களுக்கும்,​​ பயணத்திலிருக்கின்ற அந்நியர்களுக்கும்,​​ யாசிப்பவர்களுக்கும்,​​ மேலும் அடிமைகளை விடுவிப்பதற்கும்​​ பணத்தை,​​ உவப்புடன்​​ அளிப்பார்கள்;​​ மேலும் அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பார்கள் அத்துடன் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுப்பார்கள்;​​ மேலும் அவர்கள் வாக்குறுதி ஒன்றைச் செய்கின்ற போதெல்லாம் அவர்கள் தங்களுடைய வார்த்தையைக் காப்பாற்றுவார்கள்;​​ மேலும் அவர்கள் வன்கொடுமை,​​ கஷ்டம் மற்றும் போரை எதிர்கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தளராதிருப்பார்கள். இவர்கள்தான்​​ உண்மையாளர்கள்;​​ இவர்கள்தான் நன்னெறியாளர்கள்.

2:273​​ கடவுள்-ன் நிமித்தம் கஷ்டப்பட்டுக் கொண்டு,​​ மேலும் புலம் பெயர இயலாத ஏழைகளுக்கு​​ தர்மம் சென்று சேர வேண்டும்.​​ அவர்களுடைய கண்ணியத்தின் காரணமாக,​​ அறியாதவர்கள் அவர்களைச் செல்வந்தர்கள் என்று நினைக்கக் கூடும். ஆனால் சில அறிகுறிகளைக் கொண்டு அவர்களை நீங்கள் அடையாளம் காண இயலும்;​​ அவர்கள் ஒருபோதும் மக்களிடம் வலிந்து யாசிக்க மாட்டார்கள். நீங்கள் கொடுக்கின்ற தர்மம் எதுவாயினும்,​​ கடவுள் அது குறித்து முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

2:219 …தர்மமாக எதனைக் கொடுப்பது என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: கூறுவீராக,​​ "எஞ்சியிருப்பவற்றை."​​ கடவுள் இவ்விதமாக இவ்வெளிப்பாடுகளை உங்களுக்காக விவரிக்கின்றார்,​​ நீங்கள் சிந்திக்கும் பொருட்டு.

மேலதிகமான நன்மைகள் அடைவதற்கு கடவுள் நமக்கு ஸதகாவை அமைத்துள்ளார்.


Types of charities in Quran.

Zakat and Zakat-like instances
Zakat (கடமையான தர்மம்)​​ as in: 2:43, 2:83, 2:110, 2:177, 2:277, 4:77, 4:162, 5:12, 5:55, 7:156, 9:5, 9:11, 9:18, 9:71,​​ 19:13, 19:31, 19:55, 21:73, 22:41, 22:78, 23:4, 24:37, 24:56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 58:13, 73:20, and 98:5
Haqqahu (உரிய தர்மம்/​​ உரிமையுள்ள)​​ 6:141, 17:26, 30:38,
Haqqun (உரிமையுள்ள​​ /​​ கடமையான)​​ as in 51:19, 70:24

Anfaqa (செலவிடுவது​​ /​​ கொடுப்பது)​​ அல்லது அதன் வேர் சொல்​​ (Root Word): 
2:215, 2:219, 2:261, 2:262, 2:265, 2:267, 2:272, 2:273, 2:274, 3:134, 8:3, 9:121, 22:35, 28:54, 32:16, 63:10…..etc.
Sadaqah (தர்மம்)​​ or its roots:
2:196, 2:263, 2:264, 2:271, 4:114, 9:60, 9:79, 9:103, 9:104 and 58:12


ஜகாத் மற்றும் பிற வகையான​​ தர்மம்​​ பற்றி குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களையும் நாம் படிக்கும்போது, ​​ ஜகாத் "​​ எஞ்சியிருப்பவற்றை" விஷயத்தில் இருக்க முடியாது என்பதை நாங்கள் உணர்கிறோம். மாறாக,​​ இது அறியப்பட்ட சதவீதம் என்று அறிகிறோம்.​​ (70:24).​​ ஜகாத் கடமையான தர்மம்​​ அறுவடை நாளன்று கொடுக்கவேண்டும் என்பதை நாம் அறிகின்றோம்​​ (6:141).

கடவுள் கடமையான தர்மத்தை குறிப்பிடும் பொழுது​​ ஜக்காத்”​​ என்றும் அல்லது​​ “Haqqun” (கடமை)​​ or “Haqqun ma’luum” (அழிந்த கடமை)​​ என்றும்​​ குறிப்பிடுகின்றார்.

ஸதகாவை​​ குறிப்பிடும்போது​​ Anfaqa”​​ (செலவிடுவது​​ /​​ கொடுப்பது)​​ குறிப்பிடுகின்றார்.

எல்லாம் புகழும் கடவுளுக்கே..